என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐகோர்ட்டு தடை"
சென்னை:
ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வதை தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு மருந்தாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, ‘ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், ‘ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குப்படுத்தும் விதிமுறைகள் மத்திய அரசு வகுப்பதாக கூறுவதால், அவ்வாறு விதிமுறை உருவாக்கி, அரசிதழில் வெளியான பின்னர், உரிய உரிமத்தை ஆன்லைன் மருந்து விற்பனையாளர்கள் பெறவேண்டும். அதுவரை ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யக்கூடாது’ என்று கடந்த 17-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆன்லைன் மருந்து விற்பனையாளர்கள் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர், இடைக்கால மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்த நிலையில், இடைக்கால மனு மீதான தீர்ப்பை இன்று நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில், ‘ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவுக்கு, இடைக்கால தடை பிறப்பிக்கின்றோம். இந்த பிரதான வழக்கு விசாரணையை அடுத்த வாரத்தில் விசாரிக்கப்படும்’ என்று கூறியுள்ளனர். #HighCourt #OnlineMedicineSale
சென்னையில் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் சாலையோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்படுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நேற்று அதிரடி தீர்ப்பை நீதிபதிகள் அளித்து உத்தரவிட்டனர்.
சாலையோரம், இரு சக்கர வாகனம் செல்லும் வழிகள், பொதுமக்கள் நடக்கும் நடைபாதைகள் ஆகியவற்றில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் பேனர்களை வைக்கக்கூடாது என்று கூறினர். மேலும் பேனர் வைக்க அதிகாரிகள் அனுமதி தரக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
ஐகோர்ட்டு உத்தரவையொட்டி சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றும் பணி இன்று தொடங்கியது. 15 மண்டலங்களில் உள்ள அதிகாரிகள் எங்கெல்லாம் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்ததோ அவற்றை அகற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.
ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாநகர், அடையார், கோயம்பேடு, வடபழனி, வியாசர்பாடி, சாலிகிராமம், விருகம்பாக்கம், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், வேளச்சேரி, மாதவரம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் பேனர்கள் அகற்றப்பட்டன.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த பேனர்களை அகற்றி கொண்டு சென்றனர். இந்த பணிகள் மண்டல அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. கட்சி பாகுபாடின்றி அனைத்து பேனர்களையும் அகற்றினால் மட்டுமே பிரச்சினை ஏற்படாது என்பதால் அதில் கவனமாக அதிகாரிகள் செயல்பட்டனர். #BanOnBanners
சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைப்பெற்றது. நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவ- மாணவிகள் அழைக்கப்பட்டனர்.
அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின.
இதனை தொடர்ந்து 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு வருகின்ற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. நிர்வாக ஒதுக்கீட்டில் 723 எம்.பி.பி.எஸ். இடங்களும், 645 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. அவற்றை அரசு கலந்தாய்வின் மூலம் கடந்த ஆண்டு முதல் நிரப்பி வருகிறது.
நிர்வாக ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ். கட்டணம் வருடத்திற்கு ரூ.12.5 லட்சமும், பி.டி.எஸ்.க்கு ரூ.6 லட்சமும் அரசு நிர்ணயித்துள்ளது.
இந்த நிலையில் நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் குளறுப்படி குறித்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளை அளித்த தீர்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், கலந்தாய்விற்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. இதையடுத்து 16-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதிய தரவரிசை பட்டியல் தயாரித்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருப்பதால் கலந்தாய்வு நடைமுறைகள் எதையும் பின்பற்றக் கூடாது. அதனால் சி.பி.எஸ்.இ. அடுத்து என்ன முடிவு எடுக்கிறதோ அதை பொறுத்துதான் எதையும் கூற முடியும். தற்போதைய நிலவரப்படி நிர்வாக ஒதுக்கீடு கலந்தாய்வு நடத்தக் கூடாது என்று சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார். #Highcourt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்